கொரோனா தடுப்பூசியை ரஷ்யா திருட முயற்சிப்பதாக 3 நாடுகள் குற்றச்சாட்டு

கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இறங்கி உள்ளன.
தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளன.
‘கோசி பியர்‘ என்று அழைக்கப்படக்கூடிய ‘ஏபிடி29‘ ஹேக்கிங் குழு, ரஷ்ய உளவுத்துறையின் ஒரு அங்கமாக இருந்து கொண்டு, தடுப்பூசி உருவாக்கும் கல்வி மற்றும் மருந்து நிறுவனங்களில் தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டுகள் குற்றச்சுமத்தியுள்ளன.
தடுப்பூசி ஆராய்ச்சியை சீர்குலைப்பதை விட, அறிவுசார் சொத்துக்களை திருடுவதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் கூறியுள்ளது.
இந்த அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.