3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம் : மனோ கணேசன்

3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம். அரசியல் இலாபம் கருதி அதை நீங்கள் செய்யவில்லை என ன முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் அரசின் மீது மனோ நேற்றிரவு நடைபெற்ற பிரபல சிங்கள மொழி அரசியல் தொலைக்காட்சி விவாத நிகழ் குற்றச்சாட்டினார்.

வெளிநாட்டு கதை வேண்டாம். இந்த நாடு ஒரு தீவு என்பதால் எமக்கு இயற்கை பாதுகாப்பு கிடைத்தது. அதனால்தான், நோயாளர் தொகை 3,000 க்குள் நிற்கிறது. ஆனால், நாட்டை முன்கூட்டியே மூடி “லொக் டவுன்” செய்து 3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம்.

நீங்கள் மார்ச் 19, தேர்தல் வேட்பு இறுதி தினம் வரை, அதாவது பிரதான எதிர்க்கட்சி உடைவது உறுதியாகும்வரை, அரசியல் இலாபத்தை மனதில் கொண்டு, நாட்டை திறந்து வைத்தீர்கள்.
இதனால்தான் முழு நாடும் இன்று பாடுபடுகிறது என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

தனியார் தொலைகாட்சியில் நேற்றிரவு பிரபல சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வு நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மனோ கணேசன், அளவதுவள, அரசு தரப்பில் அருந்திக பெர்னாண்டோ, காஞ்சன விஜயசேகர ஆகிய முன்னாள் எம்பீக்கள் கலந்துக்கொண்டு கடும் காரசாரமாக விவாதித்த இந்நிகழ்வில் முன்னாள் எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

ஜனாதிபதி, மார்ச் 2 ம் திகதியன்று பாராளுமன்றத்தை கலைத்து, வேட்பு மனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்தார். இதற்கு பதில் அவர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விட்டு, முழு நாட்டையும் கொரோனாவை எதிர்த்து போராடும் தயார் நிலைக்கு கொண்டு சென்று இருக்கலாம். இதை அவர் செய்யவில்லை.
பொறுப்பற்ற நிலையில் வேட்பு மனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்ததால், நாடு திறந்த நிலையில் இருந்தது. கட்சிகளின் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆங்காங்கே கட்சி அலுவலகங்களில் கூடினார்கள்.

அதற்கிடையில் கொழும்பில் பல்லாயிரகணக்கானோர் கூடும் ரோயல்-தோமியன், ஆனந்த-நாலந்த கல்லூரிகளின் இறுதிப்போட்டிகளையும் நடத்த விட்டு, அதில் ஜனாதிபதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டு கொரோனானவை வளர விட்டீர்கள்.
வேட்பு மனு முடிந்த மறுநாளே, அதாவது 20ம் திகதியே நாட்டை “லொக்டவுன்” செய்தீர்கள். அதாவது வரும் ஆபத்து பற்றி தெரிந்துக்கொண்டே, அரசியல் இலாபம் கருதி செயற்பட்டீர்கள்.
பெப்ரவரி 25ம் திகதியும், மார்ச் 5ம் திகதியும் என இரண்டு முறை அன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில், கொரோனா ஆபத்து பற்றி கேள்வி எழுப்பி, உரை நிகழ்த்தினார்.

அப்போது நாடு கொரோனா பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால், சஜித் சபையில் பிரதமரையும், சுகாதார அமைச்சரையும் இதுபற்றி எச்சரிக்கை செய்தார்.

நாட்டை மூடி, விமான நிலையங்களை மூடி நாட்டை தயார் நிலையில் வைக்க சொன்னார். நீங்கள் சபையில் அவரை கிண்டல் செய்தீர்கள். அவர் சொன்னதை கணக்கில் எடுக்கவில்லை.
இன்று கொரோனா ஒரு சுகாதார பிரச்சினை மட்டும் இல்லை. அது வீட்டு பொருளாதாரத்தையும், நாட்டு பொருளாதாரத்தையும் நாசமாக்கி விட்டது.

நோயில் இறந்து, நோயால் சுகவீனமடைந்து, வருமானம் இழந்து, தொழில்கள் நலிவடைந்து, குடும்ப நிகழ்வுகள்கூட நடத்த முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் நீங்கள் பொறுப்பு கூற வேண்டும்.
இனி கொரோனா இரண்டாம் அலை வந்தால் நிலைமை மோசமடையும். அதற்கும் நீங்கள் பொறுப்பு கூற வேண்டும்.

இங்கே நான் அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார துறையினரை குறை கூற வில்லை. இந்நிலையிலும் பொறுப்புடனும், தியாக உணர்வுடனும் செயற்படும் சுகாதார, இராணுவ, போலிஸ் அதிகாரிகளை நாம் மனதார பாராட்டுகிறோம்.

அவர்களுக்கு வேண்டிய தேவைகளை கூட நீங்கள் ஒழுங்காக நிறைவேற்றவில்லை.
மார்ச் முதலாம் திகதியன்றே நாட்டை “லொக் டவுன்” செய்யாமல் திறந்து வைத்து, அரசியல் இலாபத்தை மனதில் கொண்டு இங்கே பொறுப்பற்று செயற்பட்டது, உங்கள் அரசாங்கம்தான். இதை வரலாறு பதிவு செய்யும்.

Comments are closed.