மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது சிறுமி பலி – வவுனியாவில் சம்பவம்

வவுனியா கனகராயன் குளம் ஆயிளடி கிராமத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது சிறுமி பலியானார்.

நேற்றியை தினம் பெய்த அடை மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததனை அடுத்து இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா கனகராயன் குளம் ஆயிளடி பொது மண்டபத்துக்கு சமீபமாக இருந்த வேம்பு மரம் முறிந்த நிலையில் அது ஒன்றரை வயது குழந்தையின் உயிரை பலியெடுத்துள்ளது.

தொழிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த தாயுடன் சென்ற இரண்டு பிள்ளைகளுள் ஒன்றரை வயது குழந்தையின் மீது மரம் வீழ்ந்ததனை அடுத்து சிறுமி ஸ்தலத்திலேயே பலியானார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.