12 ஆயிரத்தை கடந்தது இந்தியாவின் மகாராஷ்டிரா கொரோனா இறப்பு எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் வைரஸ் காரணமாக பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

நேற்றைய முடிவுகளின் படி மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 240 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதனை அடுத்து கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானோரில் நேற்றைய தினம் 176 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸினால் பலியானவர்களின் மொத்தை எண்ணிக்கை 12 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது

Comments are closed.