இரண்டுகட்ட சோதனைகளிலும் கொரோனா தடுப்பூசி வெற்றி – ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகின்ற நிலையில் வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சுமார் 100 க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது.

இதனடிப்படையில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனையில் 1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

1077 நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் டீ – செல்களையும் அது உருவாக்கியுள்ளமை சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

3
ஆம் கட்ட பரிசோதனையில் அதிகமானோர் பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திடம் பிரித்தானிய கட்டளை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் சர்வதேச ரீதியாக மக்களை அச்சுறுத்தி வருகின்ற நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.