புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்லைன் ஊடாக பதிவு செய்ய நடவடிக்கை

புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை ஒன்லைன் ஊடாக பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சுகாதார நிலைமையினை கருத்திற் கொண்டு இவ்வாறு பதிவு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னர் பதிவு நடவடிக்கைகள் இடம்பெற உள்ளதாக தலைமை சார்ஜென்ட் ஆர்ம்ஸ் நரேந்திர பென்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.