அரலகங்விலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி 11 மாணவர்கள் காயம்

தெஹியத்தகண்டி – அரலகங்விலவில் மேலதிக வகுப்பிற்காக சென்றுக்கொண்டிருந்த கெப் வாகனம் ஒன்று மோதியதனால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ள அதேவேளை 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்துள்ள ஏனைய மாணவர்களும் இதே வயதினை ஒத்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 7 பேர் அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை நான்கு மாணவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த கெப் வண்டியின் சாரதி குடிபோதையில் இருந்ததனால் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தினை ஏற்படுத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கெப் வண்டியின் சாரதி உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.