தேசியப் பட்டியல் விவகாரம் வலுக்கும் இழுபறி, பங்காளி கட்சிகள் சம்பந்தனுக்கு அவசர கடிதம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் மாவை சேனாதிராஜாவிற்கே வழங்கப்பட வேண்டுமென என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டாக சம்பந்தனை வலியுறுத்தியுள்ளனர்

நேற்று காலை மாவை சேனாதிராசாவை அவரது இல்லத்தில் புளொட், தமிழீழ ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

. அதன் பின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியலை மாவை சேனாதிராசாவிற்கே வழங்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா, மற்றும் சித்தார்தனின் கையெழுத்து அடங்கிய கடிதம் ஒன்றினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பில் உரிய பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் பங்காளிக் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.