அதிகூடிய விருப்பு வாக்குகளால் தன்னை வெற்றி பெற செய்த குருநாகல் மாவட்ட மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவிப்பு

இம்முறை பொதுத் தேர்தலில் கூடுதலான நம்பிக்கையை வைத்து தன்னை பலப்படுத்திய குருநாகல் மாவட்ட மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் மிகச் சிரமமான சவால்மிகுந்த ஒரு காலக்கட்டத்தில் முதல் தடவையாக தான் பொதுத் தேர்தலில் குதித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் அதிக்கூடிய விருப்பு வாக்குகளான 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை வழங்கி பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ஈட்டித்தந்த குருநாகல் மாவட்ட மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த பொதுத் தேர்தல் தனது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் தான் கலந்து கொண்ட ஒன்பதாவது பொதுத் தேர்தலாகும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும்; பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தியுள்ளேன்.

அதனை அரசியல் வாக்குறுதிகளாக மாறுவதற்கு இடமளிக்காமல் அதனை தீர்த்து வைக்க ஜனாதிபதி தலைமையிலான தான் உட்பட அரசாங்கம் செயற்பட போவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.