வீட்டில் மின்சாரம் தாக்கி வயோதிபதித் தம்பதி பரிதாப மரணம்!

மின்சாரம் தாக்கிக் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு கொழும்பு, கொலன்னாவையில் இடம்பெற்றுள்ளது.
படுக்கை அறையில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்தும்போதே இருவரும் மின்சாரம் தாக்கிச் சாவடைந்துள்ளனர்.
71, 68 வயதுடைய வயோதிபதித் தம்பதியினரே இதன்போது உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வீட்டுப் பணிப்பெண் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.