யாழ். சாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது! (Photos)

யாழ்ப்பாணம், வேலணை – சாட்டி கடற்கரைப் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாட்டி கடற்கரைப் பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுகின்றன என்று ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர் 3 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள், ஆர்.பி.ஜி. எறிகணைகள் 8 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 என்பவை மீட்டுள்ளன.

மீன்பிடித் தேவைக்காகக் குறித்த வெடிபொருட்களைச் சந்தேகநபர் உடைமையில் வைத்திருந்தார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.