வவுனியாவில் சிறுமி கூட்டு வன்புணர்வு: விடுதி முகாமையாளர் கைது!

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரை அண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவர் மேற்படி சிறுமிக்குப் பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தினார். அதற்கு உடந்தையாகச் செயற்பட்ட பெண் உட்பட 4 பேர் அண்மையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிஸார், சம்பவம் இடம்பெற்றது எனக் கூறப்படும் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியின் முகாமையாளரைக் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.