அநுரவுக்கு 50% ஆதரவு இப்போதே உள்ளது.. அவர் ஜனாதிபதி ஆவது 500% உறுதி.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 50% க்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்று தமது கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க நிச்சயமாக ஜனாதிபதியாக முடியும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது 500 சதவீதம் அதிக நம்பிக்கை என்று அவர் அடித்துக் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர் ஜனாதிபதியானவுடன் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என அனுர திஸாநாயக்க கூறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.