குழு மோதலில் குடும்பஸ்தர் கொலை!

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த வாக்குவாதம் நேற்று இரவு மோதலாக மாறியது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதிய சவள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தெமோதர கிராமிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நீதிவான் பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்குச் சடலம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.