பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சில்க் ரூட்” முனையத்தின் ஊடாக வெளியேறிய கிரிக்கெட் அணி

இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கட் அணியினர் துபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-650 மூலம் 6/19 காலை 08.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாக வெளியில் வந்த அவர்கள் இன்று அதற்கு மாறாக விமான நிலையத்திற்கு வெளியே பணம் செலுத்த வேண்டிய “சில்க் ரூட்” முனையத்தின் ஊடாக வெளியேற ஏற்பாடு செய்திருந்தனர்.

“சில்க் ரூட்” முனையத்தில் உள்ள வசதிகளுக்காக ஒரு நபருக்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுவதாகவும், அந்த தொகையை செலுத்தி இலங்கை கிரிக்கெட் அணி இந்த வசதியை பெற்றதாகவும் விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இலங்கை கிரிக்கெட் அணியை பாதுகாக்க விசேட மற்றும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.