15 வயது சிறுவனும் சிறுமியும் 67வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுவனும் , சிறுமியும் கொம்பனி வீதி அல்டெய்ர் (Altair) அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியும் சிறுவனும் சர்வதேச பாடசாலையில் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பள்ளி நேரம் முடிந்து கட்டிடத்தில் நடந்த பார்ட்டியில் குழந்தைகள் இருவரும் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிறுமியும் சிறுவனும் 67வது மாடியில் இருந்து குதித்துள்ளதாகவும், 3வது மாடியில் அவர்களது சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.