கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாக சுகவீனமுற்றுள்ளார்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கடுமையாக சுகவீனமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலைமையினால் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற முடியாத காரணத்தினால் பாராளுமன்றத்திற்கு மூன்று மாத கால அவகாசம் கோரியதோடு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது சுகயீனம் காரணமாக கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து அவர் விலகியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.