தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் 88வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று இலவசமாக மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

62 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மிருகக்காட்சிசாலையானது 1936 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி அரசுடமையாக்கப்பட்டது.

இக்கண்காட்சிக்காக 220க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலங்கினங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.