வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியுடன் 2 இளைஞர்கள் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கியுடன் இரண்டு இளைஞர்கள் வெலிகந்த தனியார் பண்ணைக்கு அருகில் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் வெலிகந்த மொனரதென்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 35 வயதுடையவர்கள் என இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நவீன துப்பாக்கி தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரிடமும் விசாரணை நடத்திய போது, ​​வெலிகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இந்த துப்பாக்கியை கண்டெடுத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியதாக வெலிகந்த பிரதான பொலிஸ் நிலைய பரிசோதகர் சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் துப்பாக்கியுடன் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் வெலிகந்த பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.