கெஹலியவின் 16 FDகள் மற்றும் 03 ஆயுள் காப்புறுதிக் பத்திரங்கள் நீதிமன்றத்தால் தடை.

05 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 குடும்ப உறுப்பினர்களின் 16 நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் 03 ஆயுள் காப்புறுதிகளை இடைநிறுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (05) உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகளின் கணவரின் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை ஜூன் 27 முதல் அமுலுக்கு வரும் வகையில் 03 மாதங்களுக்கு தடை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி தொடர்பான சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான முறைப்பாடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.