ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் ரணில் போட்டியிடுவார் – ருவன் விஜயவர்தன

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜயவர்தன நேற்று காலியில் அறிவித்தார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் நிலவுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக போட்டியிடுவார் என ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டுப் பேரணி காலியில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.