நாடு காக்கப்படும் வரை மொட்டின் ஆதரவு ரணிலுக்கு – பசில் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுன நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் வரை ஜனாதிபதிக்கு பலத்தையும் ஆதரவையும் வழங்கும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

27 வருட அரசியல் பயணத்தை கொண்டாடும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் , களுத்துறை மாவட்டத் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தனவின் ‘ரோஹித பாதை’ தேசியப் பணி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர் எம்மை விட்டு வெளியேறிய தருணத்தில் ரணில் நாட்டை காப்பாற்றினார் எனவும் , அவருக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.