பழைய அரசாங்கங்கள் வீழ்கின்றன,புதிய அரசுகள் உருவாகின்றன. இப்போது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

இந்த நாட்டை வீழ்த்த வேண்டுமானால் வேறு கட்சிகளை தெரிவு செய்யலாம், நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் தெரிவு செய்வதற்கு ஒரேயொரு இயக்கமே உள்ளது அதுவே தேசிய மக்கள் சக்தி என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று (12) சம்மாந்துறையில் இடம்பெற்ற திசைகாட்டி மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை அழித்த அரசியலையும் , தலைவர்களையும் கைவிட வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் தற்போது புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கப்பட வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.