நான் உயிருடன் இருக்கும் வரை அனுரகுமாரவை ஜனாதிபதி ஆக விடமாட்டேன்..- லொஹான்.

அனுர திஸாநாயக்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக , அவர் உயிருடன் இருக்கும் வரை அனுமதிக்கப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

நாட்டை அழிக்கும் ஜே.வி.பியின் வேலைத்திட்டத்தை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கண்டியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை எனவும் அவர் ஐந்து சதத்திற்கும் மதிப்பில்லாதவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.