பாடசாலையில் கர்ப்பிணி ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்த பிரதி அதிபர் கைது

திம்புலாகலை கல்வி வலயத்திற்குட்பட்ட சிறிபுர பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் கர்ப்பிணி ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குறித்த பாடசாலையின் பதில் அதிபர் நேற்று (21) கைது செய்யப்பட்டதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட 30 வயதுடைய ஆசிரியை சிறிபுர பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கைது செய்யப்பட்ட பிரதி அதிபர் 56 வயதுடையவர்.

ஆசிரியர் தெஹி அட்டகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சிறிபுர பொலிஸ் நிலைய கட்டளைப் பரிசோதகர் ஜி.ஆர்.ஜி. நெட்டசூரிய குறிப்பிட்டார்.

இச்சம்பவம் கடந்த 18ஆம் திகதி கல்லூரியில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கல்லூரியின் பாதுகாப்பு கமராக்கள் புலனாய்வாளர்களால் ஆராயப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அனைத்து அறிக்கைகளையும் தெஹி அட்டகண்டிய நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியை கடந்த 18ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சிறிபுர பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரதி அதிபரை நேற்று (22) தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாக , இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிறிபுர பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஜி.ஆர்.ஜி. நெட்டசூரி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.