தேர்தலுக்கு முன் வரும் முடிவுகள் .. மாத்தளை ஆதரவும் ரணிலுக்கு : பிரமித்த பண்டார

இக்கட்டான நேரத்தில் நாட்டைக் காப்பாற்ற வழிவகுத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பதாக பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தென்னகோன் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினர் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் இந்த நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தான் நிற்பதாகவும் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கட்சியில் இருந்து தனி வேட்பாளரை முன்வைப்பதற்காக செயற்பட்டாலும் , அது தனக்கு முக்கியமில்லை எனவும் ஜனாதிபதித் தேர்தலில் , மிக நெருக்கடியான தருணத்தில் நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதி ரணிலுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை நிறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (29) தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.