சஜித் அல்லது அநுர வெற்றி பெற்றாலும் , நான் இருக்கும் வரை ரணிலை வெற்றி பெற விடமாட்டேன் – தொலைபேசியில் கத்திய மொட்டு பிரபலம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் அமைச்சர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் நேற்று இரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் அரசியல் காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கலந்துகொண்ட மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பொதுஜன பெரமுனவின் பலமான ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் அல்லது அநுரா யார் வெற்றி பெற்றாலும் நான் இருக்கும் வரை , ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.