ரணிலை ஆதரிப்பவர்கள் மொட்டு கட்சியிலிருந்து விலக்கப்படுவர் : மொட்டு பொதுச் செயலாளர்.

கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த நிலையில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொலிட்பீரோ இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பொஹொட்டுவ பிரதேச மக்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளதாகவும், இதன் போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று சாகர காரியவசம்ல எந்தக் கடிதம் அனுப்பினாலும் அஞ்சப்போவதில்லை, ஜனாதிபதி இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காகவே நாங்கள் தீர்மானங்களை எடுத்தோம் என இவ்வாறு கடிதம் கிடைத்துள்ள கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.