பொருளாதாரக் கொள்கைகளை மாற்றினால் இலங்கை மீண்டும் திவாலாகும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய.

பொருளாதார கொள்கைகளை மாற்றினால் நாடு வங்குரோத்து நிலைக்கு செல்லும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் நாட்டில் செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றப்போவதாக சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.

அப்படி நடந்தால் நாடு மீண்டும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என்றார்.

இப்போது வரியைக் குறைப்பது கடினம். சம்பள உயர்வும் கடினம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையை பின்பற்றுவது அரசியல் அல்ல என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது முன்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.