அனுரகுமார ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தினார்!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (06) கட்டுப்பணம் செலுத்தினார்.

அவர் சார்பில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் ஒரு குழுவினர், கட்டுப்பணம் செலுத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.