வெளிநாட்டுப் பயணங்களுக்கு எனக்கு எந்தச் செலவும் ஆகவில்லை.. அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்கிறார்கள்..

தனது வெளிநாட்டுப் பயணங்களுக்காக 70 மில்லியன் ரூபாய் செலவழித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மறுத்துள்ளார்.

தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் 3.37 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவழித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது இந்தியா மற்றும் சீன பயணங்களுக்கு அந்த நாடுகளே ஆதரவளித்ததாகக் கூறிய அவர், தென் கொரியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சுவீடன், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்கான பயணங்களுக்கு மட்டுமே தான் செலவழித்ததாகவும் கூறினார்.

இதற்காக செலவழிக்கப்பட்ட அனைத்து பணமும் அந்த நாடுகளில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கிளைகளைச் சேர்ந்தவர்களால் செலவழிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.