ஜனாதிபதி வேட்பாளராக நாமலை அதிகாரபூர்வமாக அறிவித்தது மொட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற விசேட நிகழ்வின்போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அக்கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டொ, ஜயந்த கொடகொட உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.