இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் சுமனா நெல்லம்பிட்டிய காலமானார் (Video)

விருது பெற்ற மூத்த அறிவிப்பாளர் சுமணா நெல்லம்பிட்டிய நேற்று (08) காலை வயது மூப்பு காரணமாக காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 .

இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் என அறியப்பட்ட இவர், வானொலி மூலம் பார்வையாளர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர்.

1962 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி வர்த்தக சேவை தொகுப்பாளராக இணைந்தார்.

அவர் தயாரித்து வழங்கிய “பிபிதென காயக பரபுர” (පිබිදෙන ගායක පරපුර) , “ஓவல்டின் பனபொடி” (ඕවල්ටින් පැනපොඩි) மற்றும் ரேடியோ சங்கராவ (රේඩියෝ සගරාව) ஆகிய நிகழ்ச்சிகள், அப்போது அவர் வழங்கிய மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளாகும்.

அவரது இறுதி நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.