நீர்த்தேக்கத்தில் மிதந்த காணாமல் போன இளைஞரின் சடலம்.

வீட்டில் இருந்து காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் (14) மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை தோட்டத்தின் மேல் பகுதியில் வசித்து வந்த எஸ். மதுஷன் என்ற 24 வயது குறித்த இளைஞன் கடந்த (11) தினங்களாக வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக இளைஞனின் பெற்றோர் தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

தலவாக்கலை, புடலுஓயா வீதி நீர்த்தேக்க பாலத்தின் கீழ் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் தலவாக்கலை பொலிஸார் சடலத்தை மீட்டு பரிசோதனையின் போது சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.

சடலத்தை நுவரெலியா நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.