அனுர ஜனாதிபதியாவது சூரிய சந்திரன் போல உறுதி : நளீன் ஹேவகே

காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் நளீன் ஹேவகே, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டில் தனித்துவமான அதிகார மாற்றம் ஏற்படும்.

அன்றைய தினம் ஜனரஞ்சக ஆட்சிக்கு நாடு ஒப்படைக்கப்படும் என்றார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றி நிச்சயம் என்றார்.

எங்களது கட்சியைச் சுற்றி ஒரு வெகுஜன சக்தி உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சிகளிலும் நெருக்கடிகள் உள்ளன.

அதன் காரணமாக பிரதேசத்தில் ஏனைய கட்சிகள் அரசியல் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை அந்த கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்க முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.