இம்முறை வாக்களிப்பில் விசேட மாற்றம் – இம்முறை புள்ளடி இல்லை!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலக்கத்தின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.ஏ.எல்.எம். ரத்நாயக்க , ஒரு வேட்பாளருக்கு வாக்கைக் குறிக்கும் போது, ​​வாக்களிப்பவர் தனது ஆதரவு அபேட்சகருக்கு எண் 1 எனவும் , விருப்பத்தேர்வுகளை 2 மற்றும் 3 ஐ எழுத வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வேட்பாளருக்கான முதலிட விருப்பத்தேர்வு முதல் சுற்றில் எண்ணப்படும் எனவும், மொத்த பெறுபேறுகளில் 50% பெறுபேறுகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் விருப்புரிமைகளை எண்ண வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.