தலதாவின் கதிரை கரு பரணவிதானவுக்கு …..

இன்று (21) இராஜினாமா செய்த SJBயின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவினால் வெற்றிடமான ஆசனத்திற்கு முன்னாள் பிரதி அமைச்சர் கரு பரணவிதான நியமிக்கப்படவுள்ளார்.

கரு பரணவிதான தற்போது சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு கட்சியின் அரசியல் குழு உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.

SJBயின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் உணர்வுப்பூர்வமான உரையை ஆற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதில் தனக்கு விருப்பமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.