ஆந்திர மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தீ: 13 போ் உயிரிழப்பு; 33 போ் காயம்

ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 13 போ் உயிரிழந்தனா்; 33 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஜய கிருஷ்ணன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘அனகாபள்ளி மாவட்டம் அச்சுதபுரம் பகுதியில் உள்ள தனியாா் மருந்து உற்பத்தி நிறுவன தொழிற்சாலையில் புதன்கிழமை உணவு இடைவேளையின்போது தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் அடிப்படையில், தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய 13 உயிரிழந்தனா்; 33 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். தீ விபத்தின்போது ஆலையில் சிக்கிய 13 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது’ என்றாா்.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்தாா்.

Leave A Reply

Your email address will not be published.