தம்மிக்க பெரேரா நிறைய பணத்துடன் வந்தார்.. பசில் அதை அபகரிக்க முயன்றார் : எஸ்.பி.திஸாநாயக்க.

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்வந்துள்ள நாமல் ராஜபக்ஷ, படு தோல்வியடைவார் என நுவரெலியா மாவட்டக் கட்சியின் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கினிகத்தேன கூட்டுறவு விழா மண்டபத்தில் நடைபெற்ற மஸ்கெலியா தொகுதியின் கூட்டுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றும் போதே எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பி.எம்.எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்னிலையில் அவரின் கோரிக்கைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவுவழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக வர்த்தகரான தம்மிக்க பெரேரா, பெருமளவு பணத்துடன் தேர்தலுக்கு தயாராகி வந்த போது, அந்த பணத்தை அபகரிக்க பசில் ராஜபக்ஷ பேராசையுடன் இருந்தார் என்றார்.

நாமல் ராஜபக்ச இத்தேர்தலுக்கு தாம் சரியானவர் அல்ல என தான் தெரிவித்தததாகவும், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்து, தேர்தலில் தோற்க விரும்பவிரும்பாமல் தொழிலதிபர் தம்மிக்க பெரேரா விலகிக் கொண்டார் என எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.