மன்னார் சிந்துஜாவின் கணவரின் விபரீத முடிவு.

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் எஸ் .சுதன் (மரியராஜ்) 26 வயது, தனது சொந்த ஊரான வவுனியா பணிக்கர் புளியங்குளத்தில் நேற்று(24/08) இரவு நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவகையில்,

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் இளம் தாய் ஒருவர் குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கு காரணமாக மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களினால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்த காரணத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

சிந்துஜாவின் மறைவின் பின் அவரது கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பணிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்துள்ளார்.

நேற்றைய தினம் (24) இரவு அவர், நஞ்சருந்தி்ய நிலையில், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் சிந்துஜாவின் தாயாரிடம் உள்ள தனது பிள்ளையை அவர்கள் பார்க்க விடுவதில்லை என சிந்துஜாவின் கணவர் அண்மைக்காலமாக பலரிடமும் தெரிவித்து வந்த நிலையில் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிய வருகிறது.

இது தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.