IMF உடன் விவாதம் செய்யும் சவாலை சஜித் ஏற்றுக்கொண்டார்… அனுர மௌனம்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி உரையாடலில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக SJB தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சவாலை ஏற்றுக்கொள்வதாக கூறப்பட்ட போதிலும், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தனிப்பட்ட முறையில் இதில் பங்கேற்பார் என்பது குறித்த அறிவிப்பில் தெளிவாக இல்லை.

இதேவேளை, ஜனாதிபதியினால் சவாலுக்குட்படுத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்க இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.