தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேந்திரன் மன்னார் விஜயம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப்  பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன்,தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மன்னாருக்கு  இன்றைய தினம் திங்கட்கிழமை (2/09) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பகல் 1.30 மணியளவில் மன்னாரிற்கு  வருகை தந்த அரியநேந்திரன் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து மன்னார் நகரில் இருந்து மங்கள வாத்தியத்துடன் அழைத்துச் செல்லப்பட்ட அவர்,

மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று, மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவல் பெர்னாண்டோ ஆயரிடம் ஆசி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, நாளை செவ்வாய்க் கிழமை(03.09)மாலை வரை அவர் மன்னாரில் தங்கியிருக்கப் போவதாகவும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிய வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.