யாழ். மாவட்ட மக்கள் சிலிண்டர் சின்னத்தை வெல்ல வைப்பார்கள்! – முன்னாள் மாநகர மேயர் யோகேஸ்வரி ஆரூடம்.

ஜனாதிபதித் தேர்தலில் எமது யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சிலிண்டர் சின்னத்தை வெல்ல வைப்பார்கள் என்பது உறுதி என்று முன்னாள் யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் சனிக்கிழமை “ரணிலால் இயலும்” என்ற தொனிப்பொருளில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே யோகேஸ்வரி பற்குணராசா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒருவர்தான். நாட்டை அவர் பொறுப்பேற்றபோது நாடு வங்குரோத்தடைந்திருந்தது. திறைசேரி காலியாக இருந்தது. எமது பொருளாதாரத்துக்கு வெளிச்சம் தந்தவர் அவர்தான். எமது யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சிலிண்டர் சின்னத்தை வெல்ல வைப்பார்கள் என்பது உறுதி.

நெருக்கடி நிலையிலும் இலவசமான மண்ணெண்ணெய், படகு, வலை என்பவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தார். இதற்கு எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா முன்னின்று செயற்பட்டார். பல இந்துக் கோயில்கள் விடுவிக்கப்பட்டுள்ளதோடு அங்கு சென்று வழிபட வழியமைக்கப்பட்டுள்ளது. ஏனைய மதத்தவர்கள் சுதந்திரமாக தமது மதத்தை வழிபட ஜனாதிபதி வழியமைத்துக் கொடுத்தார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.