ஜனாதிபதித் தேர்தல் பேரணிக்கான 3000 பேருள்ள பேக்கேஜ் 45 லட்சம்.. கட்சி நிற உடைகள் அணிவிப்பு..

ஜனாதிபதித் தேர்தல் பேரணிகளில் அந்தந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்களாக 3000 பேர் பங்கேற்பதற்காக 45 இலட்சம் ரூபா பெறுமதியான பொதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக மனிதவள விநியோக நிறுவனம் ஒன்று செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான வண்ண ஆடைகளை அணிந்து, பிரசாரம் தொடர்பான கொடிகளை ஏந்தியவாறு மூன்று மணித்தியாலங்களுக்கு பேரணியில் கலந்துகொள்ளும் 3000 பேருக்கு இந்த பொதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொதியில் கொழும்பு மாவட்டத்திற்கான போக்குவரத்து செலவும் அடங்கும்.

ஒருவருக்கு ஒதுக்கப்படும் தொகை தோராயமாக ரூ.1500/=.

சேவை பெறுபவர்கள் கொழும்பு மாவட்டத்திற்கு வெளியில் செல்வதாயின் முழுப் பொதிக்கும் மேலதிக போக்குவரத்து கொடுப்பனவை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.