மன்னாருக்கு ஒரு நிகழ்ச்சித் திட்டத்துடன் தான் வருகை தந்திருக்கிறேன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

மன்னாரில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தெரிவித்தார்.

இன்றைய தினம் (17.09) மன்னார் நகரப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னாரில் பாரிய வளமுள்ளது அதில் ஒன்று சூரிய சக்தி அதனை நாம் முழுமையாகப் பாவிப்போம். மன்னாரை சூரிய சக்தியின் மத்திய நிலையமாக மாற்றுவோம்.”

“மன்னார் கடலிலிருந்து நல்ல காற்று வீசுகிறது,அதையும் பாவிப்போம் அந்த சக்தி இந்தியாவிற்கும் தேவைப்படுகின்றது.”
இங்கு வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நன்கு வாழ வழி செய்வோம், மன்னாரில் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள்
எதுவித அச்சமுமின்றி வாழமுடியும் சிங்கள கிராமங்களில் 5 பன்சலைகள் உள்ளன அவற்றையும் நாம் பொறுப்பேற்போம்.

“புலிகளுடன் தொடர்புபட்டுக் கைதாகிச் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம்.
மன்னாரை மேம்படுத்தி மன்னாரிலிருந்து திருகோணமலைக்குப் புதிய பாதை ஒன்றை அமைப்போம், கமத்தொழிலை ஊக்குவிப்போம்,
இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும் 21 ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என்றார்.

குறித்த பிரச்சாரக் கூட்டத்தில், ராஜாங்க அமைச்சர்களான  காதர் மஸ்தான்,சுரேன் ராகவன்,பாராளுமன்ற உறுப்பினர்களான  கே.திலீபன், முஷராப்,முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டதோடு,சுமார் 10 ஆயிரம் வரையிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.