இன்று கடைசி பேரணிகள்.. யாருடையது? எங்கே?

ஜனாதிபதி வேட்பாளர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று (18) நடைபெறவுள்ளன.

பிரதான பேரணிகள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் இறுதிப் பொதுக்கூட்டம் கொட்டாஞ்சேனையில் நடைபெறவுள்ளது.

SJB கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் இறுதி பொதுக்கூட்டம் மருதானையில் நடைபெறவுள்ளது.

NPPயின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்கும் இறுதி பொதுக்கூட்டம் நுகேகொடையில் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.