பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் தினேஷ் குணவர்தன!

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 47 (2) பிரிவின் பிரகாரம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தினேஷ் குணவர்தன குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியின் கீழ் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.