அநுரவின் நாடாளுமன்ற இடத்துக்கு லக்ஷ்மன் நிபுணராச்சி.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துள்ளால், வெற்றிடமாகியுள்ள அவரின் நாடாளுமன்ற ஆசனத்துக்கு லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட வேட்பாளர் பட்டியியல் அநுரகுமார திஸாநாயக்க மாத்திரமே தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குளை லக்ஷ்மன் நிபுணராச்சி பெற்றிருந்தார். அதன் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்துக்கு லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.