தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பொங்கல் வைத்துக் கொண்டாட்டம்.

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பொறுப்பேற்ற பின்னர். அவரது வெற்றியைக் கொண்டாடுமுகமாக, இன்று,(22.09), திங்கள், காலை 10.30 மணியளவில், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அமைதியான முறையில்,பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

மன்னார் பழைய பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் உப
அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில்,

தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் உட்பட கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.