லெபனான் குடியிருப்பாளர்களுக்குத் தொலைபேசி எச்சரிக்கை.

லெபனானில் ஹிஸ்புல்லா குழு ஆயுதங்களைப் பதுக்கி வைக்கும் வீடுகளைத் தாக்கவிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களை அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிடும் நிலையில் லெபனானின் தென்பகுதியிலிருந்து வெளியேறும்படிக் குடியிருப்பாளர்கள் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் எண்ணிலிருந்து அவர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக Reuters செய்தி நிறுவனம் சொன்னது.

ஹிஸ்புல்லா குழு இருக்கும் இடங்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளிச் செல்லுமாறு அவர்களிடம் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

அது போன்ற எச்சரிக்கையை லெபனான் முழுதும் அனைத்துத் தளங்களிலும் ஒளிபரப்பியதாக இஸ்ரேலிய ராணுவம் சொன்னது.

லெபனானின் தென்பகுதியில் உள்ள வீடுகளில் ஹிஸ்புல்லா பல ஆண்டுகளாக ஆயுதங்களைப் பதுக்கிவைப்பதாக அது நம்புகிறது.

அத்தகைய ஒரு வீட்டிலிருந்து ஹிஸ்புல்லா உறுப்பினர் தாக்குதல் நடத்துவதைக் காட்டும் ஒரு காணொளியை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டது.

Leave A Reply

Your email address will not be published.